இளம்பெண்களை சினிமா ஆசை காட்டி ஏமாற்றி விபச்சாரத்தில் தள்ளிய “சண்டை” நடிகர் கைது! – சென்னையில் விபச்சாரம் பெருகுவது ஏன்?
தாராளமயமாக்கல்-தனியார்மயமாக்கல்-உலகமயமாக்கல் ஊக்குவிக்கும் பாலிய ரீதியிலான வேலைகள், தொழில்கள் முதலியன: சென்னையில் விபச்சாரம் பலவிதங்களில் ஊக்குவிக்கப்படுகின்றன. குறிப்பாக தாராளமயமாக்கல்-தனியார்மயமாக்கல்-உலகமயமாக்கல் என்ற பொருளாதார தளர்த்தல் மூலம் கட்டவிழ்க்கப் பட்டப்பிறகு, இந்திய சமூக்சத்தின் மேனாட்டு மோகம், இப்பொழுது அமெரிக்க சீரழிவுகளை அரவணைத்துக் கொண்டு செல்கிறது.
- மால்களில் / பெரிய கடைகளில் / ஹோட்டல்களில் வேலை
- பப்புகளில் வேலை / பார் உதவியாளர் / சர்வர் / நடனமாட முதலிய வேலைகள்
- பல்நாட்டு கம்பனிகளில் வேலை (பெரிய அதிகாரிகளுக்கு உபசரிப்பு)
- பிபிஓ / ஐடி / இரவு நேரங்களில் வேலை
- முடி சீர்திருத்தம் / ஹேர் கட்டிங் / டேட்டோ பதிவு முதலியன
- உடலைப் பிடித்து விடுதல் / பாடி மசாஜ்
- மாடல் என்ற தொழில்-வியாபாரம் (சிறியது முதல் பெரியது வரை)
- விளம்பரங்களுக்கு நடித்தல்[1] (எல்லா வகையறாக்களும் அடங்கும்)
- பணிப்பெண்களாக வேலை செய்தல் (ஹவுஸ்-கீப்பிங்)
- சினிமா நடனங்களில் வாய்ப்பு (தினக்கூலி முறையில்)
- குறும்படங்களில் நடித்தல் (படத்திற்கு இவ்வளவு)
- சினிமாவில் நடித்தல் (சிறிய-பெரிய பாத்திரங்கள்)
இவையெல்லாம் உதாரணத்திற்குத்தான், இவற்றில் அடங்காதவை பவவுண்டு. சேவைவரிக்குட்படும் அளவில் நாகரிகமாக பலவித தொழில்கள் அதிகமாகியுள்ளன.
பிப்ரவரி 2014ல் பாலியல் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கம்: “இந்திரா பெண் முன்மாதிரி கல்வியாளர்கள் நலச்சங்க”த்தின் (பாலியல் தொழிலாளர்கள் சங்கம்) கருத்தரங்க கூட்டம் சென்னை எழும்பூர் ‘இக்ஸா’ மையத்தில் சென்னையில் நடைபெற்றபோது, செயலாளர் கே.கலைவாணி பாலியல் தொழிலாளர்கள் / விபச்சாரிகளுக்கு தற்காப்பு பயிற்சியும் கொடுக்கப்படவேண்டும், மும்பை கொல்கத்தா போல சென்னையிலும் தாங்கள் தொழில் செய்வதற்கான தனியான சிவப்பு விளக்கு பகுதியை அரசு அடையாளம் காட்டவேண்டும் போன்ற கோரிக்கைகளை வைத்தார்[2].
- சூழ்நிலை,
- கணவனால் கைவிடப்படுதல்,
- குடிகார கணவன்,
- காதலனால் ஏமாற்றப்படுவது,
- வேலைவாய்ப்பை கூறி ஏமாற்றுதல்
போன்ற காரணங்களால் இந்த தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர், இதனால், இத்தொழிலை அங்கீகரித்து, தனியாக இடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் அத்தொழிலுக்கு பயிற்சி அளிக்கப் படும் என்று கூட சொன்னார்[3]. சென்னையில் வெளிப்படையாக, இப்படியொரு கருத்தரங்க நடந்ததே தெரியாமல் பலர் இருக்கின்றார்கள்.
தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் – முதலியவற்றின் விளைவுகள் இப்படியும் வெளியாகின்றன[4]: என்.ஜி.ஓக்கள், தனிமனிதர்கள் முதலியோர் போதை மருந்து, செக்ஸ், விபச்சாரம் முதலியவற்றை பெருக்க திட்டமிட்டே வந்து கலந்து கொள்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்னர் பப் கலாச்சாரத்தை ஆதரித்து காங்கிரஸ் அமைச்சர் ரேணுகா சௌத்ரி பேசியதை நினைவு கொள்ளலாம். பெண்கள் பப்புகளுக்குச் செல்லலாம், குடிக்கலாம், யாருடன் வேண்டுமானாலும் ஆடலாம் என்றெல்லாம் நியாயப் படுத்தப்பட்டு பஏசப் பட்டது. எதிர்த்தவர்களை தலிபான் என்று முத்திரைக் குத்தி அடக்கப் பார்த்தனர். இதனால், மாணவ-மாணவியர் நட்பு ஆபாசமாகிறது, அது அத்தகைய வக்கிரங்களுக்கு பயனாகிறது. அறிந்தும்-அறியாமலும் அவர்கள் அவ்வலைகளில் சிக்கிக் கொள்கின்றனர். ஆரம்பத்திலேயே அறிந்து கொள்பவர்கள் தப்பித்துக் கொள்கின்றனர், மற்றவர்கள் விழுகின்றனர். செக்ஸ்-ஊக்குவிக்கும் மாத்திரைகள் என்ற பெயரில் மாத்திரிகைகளை உற்பத்தி செய்ய மருந்து கம்பனிகள் ஆரம்பித்து விட்டன. இதில் கூட பெண்களுக்கு தனி என்று விளம்பரங்கள் செய்கின்றன. போதாகுறைக்கு எப்படி ஒரு பெண் நூற்றுக் கணக்கான ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனைப் படைத்துள்ளாள் என்று செய்திகள் வேறு! போலந்து நாட்டின், அனிய லைசேஸ்கா என்ற [Ania Lisewska] 21-வயது பெண் 1,00,000 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சாதனைப் படைப்பேன் என்று அறிவித்துள்ளாள்[5].
சென்னையில் ஏப்ரல் 2014ல் அதிரடி சோதனை: சென்னை வடபழனியில் உள்ள ஆடம்பர பங்களா வீட்டில், விபசாரம் நடப்பதாக விபசார தடுப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் மேற்பார்வையில் விபசார தடுப்பு பிரிவு உதவி கமிஷனர் கணபதி, இன்ஸ்பெக்டர் கோபிநாத் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு ரகசியமாக கண்காணிக்கப்பட்டது[6]. அந்த பங்களா வீட்டில் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான தனிப்படை போலீசார், 03-04-2014 இரவு குறிப்பிட்ட பங்களா வீட்டில் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில், குறிப்பிட்ட பங்களா வீட்டில் விபசாரம் நடப்பது தெரிய வந்தது. சோதனை மேற்கொண்டதில் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டிருந்த 4 இளம்பெண்கள் போலீசாரால் மீட்கப்பட்டனர்[7].
விபச்சாரத்தில் ஈடுபடுத்திய “சண்டை” நடிகர் கைது: அந்த இளம்பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அவர்களை சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைகாட்டி விபசாரத்தில் தள்ளியது, குமார் என்ற பாம்பே குமார் (வயது 42) என்பது தெரிய வந்தது. வடபழனியில் வசிக்கும் அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு துணையாக இருந்த மேலும் 3 பேரும் பிடிபட்டனர். அவர் தமிழ் மற்றும் இந்தி படங்களில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். அந்த வகையில், சினிமா டைரக்டர்களை தனக்கு தெரியும் என்பதால், சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என்று ஆசைகாட்டி, இவர் ஏராளமான இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளி இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம் அவர் பெரும் அளவில் பணம் சம்பாதித்து இருக்கிறார்[8]. இவருக்கு உறுதுணையாக செயல்பட்ட 3 புரோக்கர்களும் கைதானார்கள்[9]. சினிமா ஆசையில் இவ்வாறெல்லாம் இருக்கும் என்று அப்பெண்களுக்குத் தெரியாதா என்று தெரியவில்லை. இதற்கெல்லாம் என்ன காரணம்?
திரையில், திரைமறைவில் அரங்கேறி வரும் நிர்வாணங்கள், ஆபாசங்கள்[10]: தொடர்ந்து தேவையில்லாமல் சமூகத்திற்கு ஒவ்வாத விசயங்களுக்கு, சில குறிப்பிட்ட அமைப்புகள், இயக்கங்கள் மற்றும் ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. பப், குடி, கூத்து, ஓரின சேர்க்கை முதலிவவற்றுடன் நிர்வாணமும் சேர்ந்து விட்டது. இருப்பினும் இந்திய மற்றும் இந்திய-அல்லாத நிர்வாணத்தை பாகுபடுத்திக் காட்டமுடியும். பாலியல் ரீதியில் கோக்கும் மனங்களுக்கு நிர்வாணம் ஆபாசபமாகவே தோன்றும். பல ஆண்டுகளாக நடந்து வந்த பெண்களின் நிர்வாண பூஜை தடை செய்யப்பட்டது. ஆனால், ஐந்து நடசத்திர மற்றும் பப்-ரெஸ்டாரென்டுகளில் அரைநிர்வாணம், கிளப்-டான்ஸ் போன்றவை அனுமதிக்கப் பட்டு நடந்து வருகின்றன. இக்கால இளம் பெண்கள் மற்றும் இதர பெண்களும் கவர்ச்சியாகவே ஆடைகளை உடுத்தி வருகிறார்கள். டி-சர்ட், குட்டை பாவாடை / ஸ்கர்ட், பேன்ட்-சர்ட் போன்றவற்றை அணிந்து கொண்டு உடலின் பகுதிகள் தெரியும்படித்தான் பொது இடங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். சினிமாக்களில் சொல்லவே வேண்டாம், பாட்டு, ஆட்டம், குத்தாட்டம் என்ற பெயர்களில் கேவலமாக ஆபாசங்கள் திரையேறியுள்ளன. இந்நிலையில் நிர்வாணம், அரை நிர்வாணம், ஆபாசம், பாலியல் தூண்டுவது முதலியவை எதுவரை, எப்படி இருக்கலாம், எங்கு மீறும் போது தடுக்கலாம், எதிர்க்கலாம் என்று வரையறை செய்யப்படவில்லை. மற்ற அந்த பலானப் பிரச்சினைகளுடன், இப்பிரச்சினையும் நீதிமன்றத்திற்குச் சென்றபோது, இதற்கும் ஒரு தீர்ப்புக் கொடுக்கப் பட்டுள்ளது. எனவே சென்னை என்று பார்க்கும் போது, கூடிய சீக்கிரத்தில் ஒரு “ரெட்-லைட் / சிகப்பு விளக்கு” ஏரியா / இடம் வந்துவிடும், சமூகம் மேலும் சீரழிந்துவிடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
© வேதபிரகாஷ்
04-04-2014
——————————————————————————————————————————————-
[1] http://evilsofcinema.wordpress.com/2014/03/17/kamasutra-pill-ad-film-sexy-porn-or-acceptable-to-society/
[2] http://liberalizationprivatizationglobalization.wordpress.com/2014/02/08/sex-workers-demand-red-light-area-in-chennai/
[3] http://liberalizationprivatizationglobalization.wordpress.com/2014/02/08/sex-workers-prostitutes-brothels-demand-rightful-places-for-their-profession/
[4] http://evilsofcinema.wordpress.com/2014/03/15/sex-tablets-business-advertisement-degrading-womanhood/
[5] There’s a 21-year-old woman from Poland who wants to have sex with 100,000 men, which would definitely be a world record. She wants to have sex with each of them for 20 minutes, which comes out to three years and 10 months of sex. She says her boyfriend wasn’t thrilled with her plan, but, quote, “had to come to terms with it.”
http://www.huffingtonpost.com/2013/08/28/ania-lisewska_n_3831495.html?utm_hp_ref=weird-news
[6] http://www.maalaimalar.com/2014/04/03151040/Women-forced-into-enjoy-arrest.html
[7] http://www.dailythanthi.com/2014-04-03-Actor-arrested-for-pushing-young-girls-into-prostitution
[8]மாலைமலர், பெண்களைவிபசாரத்தில்தள்ளியஸ்டண்ட்நடிகர்கைது, சென்னை, 04-04-2014.
[9] http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=86181
[10] https://bharatsex.wordpress.com/2014/02/10/nudity-exposure-obscenity-sexy-supreme-court-judgment/