கிரேக்கரின் ஆண்குறி-பெண்குறி வழிப்பாடுகளின் பின்னணியில் உள்ள உண்மைகள்
நிர்வாணம், துறந்த நிலை, ஆடை அணிந்த நிலை: அப்ரோடைட்ஸ் (Aphrodites) செக்ஸின் கடவுள். “aphrodisiasic” என்றால் காமத்தைத் தூண்டி உடலுறவு கொள்ளச் செய்யும் காம-இச்சை (veneral, producing veneral desire). வீனஸ் (Venus) என்ற பெண்கடவுள் குறிக்கப்படும். இதிலிருந்து பல சொற்கள் பெறப்படும், அவையெல்லாம் செக்ஸ் சம்பந்தமாகவே இருக்கும். மொஹம்மது வீனஸை முதலில் வழிபட்டுவந்தார் என்பது கவனிக்கத் தக்கது. இவ்வாறு கிரேக்கர்கள் நிர்வாணத்துடன் அறிவிஜீவிகளாக இருந்ததை இந்தியர்களுக்குச் சொல்வதில்லை. ஆனால், நிர்வாண கிரேக்கர்களிடமிருந்து ஆடைக்கட்டிய இந்தியர்கள் எல்லா கலை-விஞ்ஞானங்களையும் காப்பி அடித்தனர் என்று எழுதிகின்றனர்! ஆகவே, நிர்வாண உலகில், ஆண்குறி-பெண்குறி அவர்களது நினைவுகளை ஆக்கரமித்து, சித்திரங்களாக, சிற்பங்களாக மாறியது வியப்பில்லை. அவர்களைப் பொறுத்த வரைக்கும் உடலியல் மற்றும் ஆன்மீகவியல் ரீதியில் வித்தியாசம் பார்த்ததாகத் தெரியவில்லை. ஆனால், கிருத்துவம் திணிக்கப்பட்ட பிறகு, அத்தகைய “நிர்வாணம்” வேறு விதமாகத் தோன்றியது மர்மமில்லை, ஏனெனில், அவை தமது இறையியலை பாதித்தனால் மறைக்க ஆரம்பித்தனர். அத்தகைய மறைப்பு வேலைகள் தாம் அழிவு வேலைகளில் நிறைவேறியது. பாம்பேயில் அகழ்வாய்வின் போது அத்தகைய பல சிற்பங்கள் உடைந்திருந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆண்குறிகள் இரண்டு விரைகள் கூடிய சிற்பங்கள் மேடைமீது பிரதானமாக வைக்கப்பட்டிருந்தன.
திகம்பர கோவில், சிற்பங்கள் முதலியவற்றை உண்டாக்கியவர்கள் கிரேக்கரா, கிரேக்கரின் முன்னோடிகளா அல்லது திகம்பர ஜைனர்களா?: டெலோஸ் என்ற இடத்தில் உடைந்த நிலையில் இருந்த அவை “விசித்திரமான சிற்பங்கள்” எனக் குறிப்பிடப் பட்டன. கிரேக்கத் தீவுகளில் ஒன்று ரெலோஸ் [Delos] இங்கு அகழ்வாய்வில் பல சிற்பங்கள் கிடைத்துள்ளன. இங்கு ஸ்டோய்வடியோன் [Stoivadeion] என்ற கோவில் உள்ளது. இது டையோனிசியஸ் [ Dionysus] என்ற கடவுளுக்கு நிறுவப்பட்டது. இக்கோவிலின் இரண்டு பக்கங்களிலும் பாபோசிலெனோய் [Paposilenoi] என்ற இருவரின் சிலைகள் காணப்படுகின்றன. இருபக்கங்களிலும் உள்ள உயர்ந்த இரு தூண்களின் மீது, பெரிய ஆண்குறி சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆனால், அவை உடைந்த நிலையில் காணப்படுகின்றன. பீடத்தின் நான்கு பக்கங்களிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிர்வாண கோவில், பெரிய அளவில், ஆண்குறி முதலியவையெல்லாம், அம்மக்கள் அவற்றிற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதைக் காட்டுகிறது. அக்கோவில், சிற்பங்கள் முதலியவற்றை உண்டாக்கியவர்கள் கிரேக்கரா, கிரேக்கரின் முன்னோடிகளா அல்லது திகம்பர ஜைனர்களா?
கிருத்துவத்தால் கிரேக்க ஆதாரங்கள் அழிக்கப்பட்டனவா?: கிரேக்கத்திலிருந்து பைபிள், தத்துவங்கள் முதலியப் பெற்று இறையியலை வளர்த்து அவ்வாறே அவர்கள் கடவுளர்களையும் தமதாக மாற்றிக் கொண்டதால், பிற்பாடு, ஏசு, மேரி முதலியோர் நிர்வாணமாக இருந்தது பயத்தை உண்டாக்கியது. ஆகையால் தான் அத்தகைய சிற்பங்கள் அழிக்கப்பட்டன. மாற்றமுடியும் என்ற நிலையில் உள்ளவை மாற்றப்பட்டன. அதாவது, உடைகள் உடுத்தியிருந்தது மாதிரி செதுக்கப்பட்டன; நிர்வாண ஓவியங்களில் அவற்றை மறைத்து தீட்டப்பட்டன. இருப்பினும் “டின்டின்னாபுலா” (tintinnanabula) என்ற உலோகத்தால் செய்யப்பட்ட தொங்கும் மணிகள் அப்பட்டமாக ஆண்குறியை பிரதானமாக வைத்து வார்க்கப்பட்டது தெரிகின்றது. ஆண்குறியை மெல்லிய சங்கிலி தாங்குகிறது; அதிலிருந்து மணிகள் தொங்குகின்றன; ஆண்குறியே மீன், சிங்கம் மற்ற விலங்குகளின் பின்பகுதி உருவம் (இரண்டு கால், ஒரு வால்) கொண்டு,
முன்பகுதி ஆண்குறியாக உள்ளது; அல்லது, ஒரு மனித ஒருவமே தொங்கவிடப்பட்டு, அவனது ஆண்குறி பெரிதாக செய்யப்பட்டு அதிலிருந்து மணிகள் தொங்கவிடப்பட்ட நிலை; இதைத் தவிர வாயினுள் உள்ளது மாறிய ஆண்குறிகள் (அவை முகமூடிகள் எனக் குறிப்பிடப்படுகின்றன);
பிரியாபுஸின் திகைக்க வைக்கும் ஆண்குறி: பிறகு “பிரியாபுஸ்” (Priapus) பற்றி சொல்லவே வேண்டாம். மற்ற கிரேக்க சிற்பங்களுக்கும், இதற்கும் உள்ள ஒரே வித்தியாசம் என்னவென்றால், மற்ற சிற்பங்களில் (கடவுளர்களின் சிற்பங்களேயானாலும்) ஆண்குறி இயற்கையான அளவில் செதுக்கப் பட்டிருக்கும், ஆனால், “பிரியாபுஸ்” சிற்பத்தில் பெரிதாக / அளவிற்கு அதிகமான பரிமாணத்தில் இருக்கும், பிரதானமாகச் செதுக்கப்பட்டிருக்கும்! அதே மாதிரி மெர்குரியின் சிற்பங்களும் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. மெர்குரி “கடவுளர்களின் தூதுவன்” என கருதப்படுகிறான். இச்சிற்பங்கள் சுட்டமண், உலோகங்களினால் செய்யப்பட்டவை. இவற்றை போர்கியா, நேப்பிள்ஸ், லௌரே, பாம்பேய் முதலிய மியூஸியங்களில் / அருங்காட்சியகங்களில் காணலாம்!
ஜைனத்தில் நிர்வாண சந்நியாசிகள் உருவானது எப்படி?: . ஜைனர்களில் சித்தாந்த ரீதியில் பிணக்கு வந்தபோது, அவர்கள் “திகம்பரர்கள்” (ஆடை அணியாதவர்கள், நிர்வாணிகள்) மற்றும் “ஸ்வேதம்பரர்கள்” (ஆடை அணிந்தவர்கள், அதாவது வெளையாடை தரித்தவர்கள்) என்று இரண்டாகப் பிரிந்தனர். இங்கு போராடும் சத்திரியர்களின் நிலை தான் அவர்களைப் பிரிய வைத்தது. முழு அஹிம்சை வேண்டும் அல்லது வேண்டாம் என்ற வாதம் வந்தபோது, ஆடைகூட அஹிம்சைக்கு வழிவகுக்கும், எனவே, அதையும் துறக்க வேண்டும் என்ற உறுதியுடன், திகம்பரர்கள் முடிவு செய்து, அவ்வாறே வாழ ஆரம்பித்தனர். நிர்வாணமே எங்களது ஆடை என்று திகம்பரர்கள் பெருமையாக துறந்து வாழ்ந்தனர். அஹிம்சையை விரும்பி, போரை எதிர்க்கும் பண்பைக் கொண்டவர்கள்.
கிரேக்கர்களின் மூலம்: மஹாபாரத யுத்தத்திற்குப் பிறகு, பங்கு கொண்ட சத்திரியர்கள், வீரர்கள் பலதிசைகளில் செல்ல நேர்ந்தது. 3102 BCE காலத்தில் துவாரகா பகுதி மூழ்கி, சுற்றியுள்ள பகுதிகளில் சேதங்கள் நிகழ்ந்துள்ளன. அதனால், அவர்கள், செல்ல வேண்டிய இடத்திற்கு பதிலாக, வேறு இடங்களில் கூட சென்று தங்கி விட்டனர். கிரேக்கர்களின் மூலம் அயோனியர்களிடமிருந்து பெறப்படுகிறது. இவர்கள் எல்லோருமே “பாதை மாறிய சத்திரியர்கள்” (degraded Khastriyas) என்றே, இந்திய புராணங்கள் குறிப்பிடுகின்றன. எட்வொர்ட் பொகோக் (Edward Pockoke)[1], ஜே. பி. பூரி (J. B. Bury) போன்ற சரித்திராசிரியர்கள் இதனை எடுத்துக் காட்டியுள்ளனர் கிரேக்கர்களும் ஜைனர்களைப் போன்ற நிர்வாண கொள்கையினைக் கொண்டிருந்தனர், அதனைத்தான் தமது கலையில் வெளிப்படுத்தினர் என்று எடுத்துக் காட்டப்படுகிறது[2]. இப்பொழுதும், அப்பகுதிகளில் இருந்த நிர்வாண சந்நியாசிகள் பௌத்தர்களா, ஜைனர்களா, என்ற குழப்பவாதம் நீடித்து வருகின்றது[3]. கிரேக்கத்தில் ஒரு சிரமணாச்சாரியாரின் கல்லறை கண்டு பிடிக்கப்பட்டது என்ற செய்தி வந்தபோதும், அவர் பௌத்தரா அல்லது ஜைனரா என்ற விவாதம் ஏற்பட்டது.
கிரேக்கர்கள் கிழக்கிலிருந்து, மேற்கு திசைக்குச் சென்று குடியேறிய மக்கள்: கிரேக்கர்கள் யார் என்று ஆராய்ந்தவர்கள் அவர்களை பலவாறு குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட இடத்திலிருந்து வந்திருக்கலாம் என்ற ரீதியில், அயோனியன் கிரேக்கர் [Ionians], மைசீனியன் கிரேக்கர் [Mycenaean Greeks], மைனோயன் கிரேக்கர் [Minoan civilization], டோரியன் கிரேக்கர் [Dorians], ஏலியன் கிரேக்கர் [Aeolians], அகியன் கிரேக்கர் [Achaeans], இட்ருஸ்கன் கிரேக்கர் [Etruscans, 768 BC–264 BC] என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். இதில், அயோனியர் என்பது யவனர் என்ற இந்தியமொழி பிரயோகத்துடன் ஒத்து வருகிறது. மேலும், கிரேக்கரே, தாங்கள் மற்றும் தங்களது மூதாதையர் கிழக்கிலிருந்து வந்தார்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். அதாவது, “பாதை மாறிய சத்திரியர்கள்” (degraded Khastriyas), ஜைனர்கள் என்ற முறையிகல் வந்து குடியேறி, நாளடைவில், சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு ஏற்ற்படி மாறியிருக்கலாம். மேலும், குறிப்பிட்ட குழுக்களின் சரித்திர காலம், கிரேக்கர்களுக்கு முன்னர் செல்கிறது. 3102 BCE முதல் சுமார் 1000 BCE லாம் வரை என்ன நடந்தது, என்று சரித்திராசிரியர்களும் எழுதி வைக்கவில்லை.
© வேதபிரகாஷ்
29-08-2016
[1] Pococke, Edward. India in Greece; Or, Truth in Mythology... Griffin, 1856.
[2] Bonfante, Larissa. “Nudity as a costume in classical art.” American Journal of Archaeology (1989): 543-570.
[3] Halkias, Georgios T. “The Self-immolation of Kalanos and other Luminous Encounters Among Greeks and Indian Buddhists in the Hellenistic World.”Journal of the Oxford Centre for Buddhist Studies 8 (2015).